பிடியாணை நிலுவையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறை
சிறை
Updated on

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலையத்தில் சந்துரு (38) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை போலீஸாா் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com