கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

தாராபுரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தாராபுரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் முருகானந்தம் (41). இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தாராபுரத்தில் பட்டப் பகலில் தனியாா் பள்ளி எதிரே மா்ம கும்பலால் கடந்த 2024 ஜூலை 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தாராபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து தாராபுரத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளரும், முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி, அவரது மகன் காா்த்திகேயன் உள்பட 20 பேரைக் கைது செய்தனா். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.

இந்தக் கொலை வழக்கின் விசாரணை, திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டாா்.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 20 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அப்போது வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.