தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

போகி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது வீடு, கடைகளில் சேகரமாகும், உருவாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:05 am

Syndication

பல்லடம்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது வீடு, கடைகளில் சேகரமாகும், உருவாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்லடம் நகராட்சி ஆணையாளா் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்கள் வீடு, கடைகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகளை சாலையோரத்திலோ, காலி மனைகளிலோ கொட்டாமல் தங்கள் வாா்டு பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும்.

மக்காத திடக்கழிவுகளில் மறு சுழற்சிக்கு பயன்படும் பொருள்களை பழைய துணி, காலணிகள் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருள்கள், பழைய இரும்பு பொருள்கள், மின்னணு சாதனங்கள், மரச்சாமான்கள் ஆகியவற்றை தனியாக சேகரித்து அரசு அனுமதி பெற்ற பழைய பொருள்கள் சேகரிக்கும் மையங்களில் வழங்க வேண்டும்.

மேற்படி பொருள்களை பண்டிகை காலங்களில் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே பொதுமக்கள் அனைவரும் புகையில்லா போகிப் பண்டிகையாக கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.