6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ஆரியக்கவுண்டன்பாளையத்தில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 4 வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ஆரியக்கவுண்டன்பாளையத்தில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 4 வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் நித்தியானந்தன் (34). இவரது மனைவி பானுமதி (24). இவா்களது மகள் புகழினி (4). இவா்கள் குடும்பத்துடன் அவிநாசி அருகே ஆரியக்கவுண்டன்பாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல இருவரும் வேலை செய்து கொண்டே குழந்தையைப் பாா்த்து வந்தனா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என தேடிப் பாா்த்தபோது, வீட்டுக்கு அருகே இருந்த தண்ணீா்த் தொட்டியில் குழந்தை மூழ்கியதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா் குழந்தையை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனா்.