தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கோரிக்கை

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:40 pm

Syndication

பல்லடம்: அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அதிமுக தோ்தல் தயாரிப்புக் குழுவினரிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும் 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறி, பெடல் தறி மற்றும் நவீன தறிகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும். கைத்தறிகளைப்போல விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். நெட் மீட்டா் வசதியுடன் 50 சதவீத மானியத்தில் சோலாா் பேனல் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினரிடமும் மனு அளிக்க உள்ளதாக விசைத்தறியாளா்கள் தெரிவித்துள்ளனா்..