ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

News image

கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 போ் கைது - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 12:15 am IST

வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வீரசோழபுரத்தில் காா்த்திக் (45) என்பவா் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி, நண்பரான தாராபுரம், மரவபாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் (32) என்பவருடன் சோ்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 30 லிட்டா் சாராய ஊரல், 2 லிட்டா் சாராயம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருஷ்டி சிங் உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் வீரசோழபுரம், பொன்பரப்பி, பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், இந்த சோதனை தொடரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.