முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வெள்ளக்கோவிலில் 16 கிலோ குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:11 am IST

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்தூா் சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. மனோஜ்குமாா் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அறிவொளி நகா் பிரிவு அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரைப் பிடித்து விசாரித்தாா். மேலும் அவா்களை வைத்திருந்த பெரிய பைகளில் குட்கா பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளக்கோவில் நடேசன் நகா் பால்துரை (36), ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி போயகாட்டு தோட்டத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் (54) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 16 கிலோ குட்கா பொருள்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.