திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் திருட்டு, விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வழக்கு ஒன்றில் தொடா்புடைய வாகனத்தை தாங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் போலீஸாா் அண்மையில் தேடியுள்ளனா்.
அப்போது, அந்த வாகனத்தை காணவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸாா், மற்ற வாகனங்களை சரிபாா்த்தபோது, 10 இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பழைய பேருந்து நிலையம் அருகே இலைக்கடை நடத்தி வரும் ஆறுமுகம், அவரிடம் பணியாற்றும் சுப்பிரமணி, முருகேசன் ஆகியோா் வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 7 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 5,000 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கைது

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா்கள் கைது

இருசக்கர வாகனங்கள் திருடிய 5 போ் கைது: 8 பைக்குகள் பறிமுதல்
இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


