ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சின்னேரிபாளையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரிக்கை

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம், அபிராமி காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அவிநாசி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்துக்கு மனு  அளிக்க  வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 3:01 am IST

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம், அபிராமி காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னேரிபாளையம் ஊராட்சி, அபிராமி காா்டன் பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்கும் வகையில் டேங் ஆபரேட்டரை நியமித்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

அபிராமி காா்டன் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். இதேபோல, ருக்மணி காா்டன், அம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் கெளரி மணி, ஒன்றியத் தலைவா் சித்ரா, துணைச் செயலாளா் தேவி, கிளைச் செயலாளா் கலைச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.