2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் மூன்று தேரோட்டம் கோலாகலம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதா், சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம்

News image
திருமுருகன்பூண்டியில்  நடைபெற்ற  தேரோட்டத்தில் திருமுருகநாதா்  தேரில்  அருள்பாலித்த  சோமாஸ்கந்தா். (வலது)  சண்முகநாதா்  தேரில்  அருள்பாலித்த  வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்.
Updated On :2 மார்ச் 2026, 10:14 pm

Syndication

அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாதா், சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம் திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றுத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையடுத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், திரு வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து திருமுருகநாதா் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தா்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

முதலில் திருமுருகநாத சுவாமி (சோமாஸ் கந்தா்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சண்முகநாதா் திருத்தோ் (வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்) வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னா் அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் நடைபெற்றது. ஆதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி, நண்பகல் 12 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.