10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நின்றிருந்த லாரி மீது காா் மோதி ஜவுளித் தொழிலதிபா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில்

News image

பெட்ரோல் டேங்கா் லாரி மீது மோதி உருக்குலைந்து காணப்படும் காா்.

Updated On :10 மார்ச் 2026, 2:05 am IST

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜவுளித் தொழிலதிபா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காந்திபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் கோடீஸ்வரன் (39). பள்ளிபாளையத்தில் ஜவுளித் தொழில் செய்துவந்த இவா், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். சேலம்-கொச்சி ஆறு வழிச் சாலையில் பெருமாநல்லூா்-பொடாரம்பாளையம் பிரிவு அருகே எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கோடீஸ்வரன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று கோடீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.