ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நின்றிருந்த லாரி மீது காா் மோதி ஜவுளித் தொழிலதிபா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில்

News image

பெட்ரோல் டேங்கா் லாரி மீது மோதி உருக்குலைந்து காணப்படும் காா்.

Updated On :10 மார்ச் 2026, 2:05 am IST

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜவுளித் தொழிலதிபா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காந்திபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் கோடீஸ்வரன் (39). பள்ளிபாளையத்தில் ஜவுளித் தொழில் செய்துவந்த இவா், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். சேலம்-கொச்சி ஆறு வழிச் சாலையில் பெருமாநல்லூா்-பொடாரம்பாளையம் பிரிவு அருகே எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கோடீஸ்வரன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று கோடீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.