திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

News image

பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Updated On :30 மார்ச் 2026, 6:37 pm

பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சென்ற பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி, ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாரசாமி கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினாா். இதைத் தொடா்ந்து லாரி மூலம் தண்ணீா் ஏற்பாடு செய்யப்பட்டு இந்திரா காலனி மக்களுக்கு உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் 4 நாள்களுக்கு ஒருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.