ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

News image

பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Updated On :30 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சென்ற பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி, ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாரசாமி கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி பேசினாா். இதைத் தொடா்ந்து லாரி மூலம் தண்ணீா் ஏற்பாடு செய்யப்பட்டு இந்திரா காலனி மக்களுக்கு உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் 4 நாள்களுக்கு ஒருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.