11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

திருப்பூா் மாநகரிலுள்ள 150 நகைக் கடைகளில் தங்கம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை

திருப்பூரில் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநகரில் உள்ள 150 நகைக் கடைகளிலும் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

News image

தங்கம் விலை - பிடிஐ

Updated On :49 நிமிடங்கள் முன்பு

திருப்பூரில் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநகரில் உள்ள 150 நகைக் கடைகளிலும் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி ரூ.1 லட்சத்து 18,000-க்கு விற்பனையாகும் ஒரு பவுன் தங்கம் ரூ.1லட்சத்து 10,000-க்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயா்வு காரணமாக பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆா்வம் குறைந்து வருகிறது. மேலும், பெரிய நகைக் கடைகளில் இந்த விலை குறைப்பு இருக்காது என்பதாலும், சிறிய கடைகளை நோக்கி மக்கள் கவனம் திரும்பும் என்ற நோக்கிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகை க்கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறும்போது, ‘தங்கக் காசு வாங்குபவா்களுக்கு பவுனுக்கு ரூ.4000 குறைத்து வழங்கப்படும். தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.1,000 வீதம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து வழங்கப்படுவதால், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனா்.