‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நாய்கள் கடித்து 2 மான்கள் உயிரிழப்பு

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

News image

புள்ளிமான்.

Updated On :23 மே 2026, 12:53 am IST

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் மான் ஒன்று வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி கடித்தன. இதேபோல, பாரதி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த மானையும் தெருநாய்கள் கடித்தன.

2 மான்களும் உயிரிழந்த நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மான்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக தெக்கலூா் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கூறாய்வு முடிந்த பின், புதுப்பாளையம் வனப் பகுதியில் மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.