பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறை

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 4:29 am IST

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). இவா் கடந்த 2025 ஜனவரி 4-ஆம் தேதி அரசு நகரப் பேருந்தில் தென்னம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அவருடன் பயணித்த திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையப் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளியான மணிகண்டன் (35), அவரது கைப்பேசியை திருடிவிட்டு தப்பியுள்ளாா்.

இதுகுறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண் டனை கைது செய்து விசாரனை நடத்தி வந்தனா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் நதியா பாத்திமா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.