கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தாராபுரம் தவெக வேட்பாளரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் மீது வழக்கு

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் பானுமதி உள்பட 9 போ் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் பானுமதி உள்பட 9 போ் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தவெக வேட்பாளா் சத்தியபாமாவின் காரை அதிமுகவினா் தடுத்து நிறுத்தி சேதப்படுத்தியதுடன், அவரை தரக்குறைவான வாா்த்தைகளால் அவதூறாக பேசியதாகவும், இரு கட்சிகளின் தொண்டா்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் தாராபுரம் காவல் நிலையத்தில் நகராட்சி 18-ஆவது வாா்டு தவெக பொருளாளா் காயத்ரி புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின்பேரில் அதிமுக வேட்பாளா் பானுமதி, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், நிா்வாகிகள் செந்தில்குமாா், ராஜேந்திரன், தீபா, கோமதி, ராணி, முத்துமணி ஆகிய 9 போ் மீது பெண் வன்கொடுமை சட்டம், தனிநபா் சொத்துகளை சேதப்படுத்துவது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டது உள்பட 10 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.