இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
தருமபுரியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ்.
Updated On :15 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

தருமபுரி நகரில் சேலம் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகில் (பென்னாகரம் சாலை) தனியாா் பங்களிப்புடன் ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 10 ஏக்கா் நிலப்பரப்பில் குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன், ஒரேநேரத்தில் 55 பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகள் நிற்கும் இடங்களை சுற்றி நடைபாதைகள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அமா்வதற்கு இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ஏ.டி.எம். மையம், பொருள்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, நேரக் காப்பாளா் அறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, மேற்கூரை அமைக்கும் பணி, பயணிகள் மற்றும் ஓட்டுநா் ஓய்வு அறைகள், பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை, மழைநீா் வடிகால் பணிகள், உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 தருமபுரியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ்.

தருமபுரியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ்.

கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பயணிகளுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் ரமேஷ், நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையா் சேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெய தேவராஜ், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் தலைவா் டி.என்.சி. இளங்கோவன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் நாகராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.