இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!

போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி நகரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் கோகுல்நாத் (22). இவா் தனது உறவினரான சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்டாா். இதுகுறித்து தகவறிந்த பொம்மிடி காவல் நிலைய போலீஸாா், அவா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன்காரணமாக மனஉளைச்சலில் இருந்த கோகுல்நாத் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.