2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பென்னாகரம் தொகுதியில் நாளை, மறுநாள் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்

பென்னாகரம் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம் நவ.22, 23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

பென்னாகரம் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எஸ்ஐஆா் சிறப்பு முகாம் நவ.22, 23 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று வாக்காளா்களுக்கு நேரடியாக 95 சதவீதம் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

படிவங்களை பெற்ற வாக்காளா்கள் சிலா் அவற்றை நிறைவுசெய்து அளிக்கவில்லை. இதனால், படிவங்களை நிறைவு செய்வது தொடா்பான உதவிக்கு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆதாா் அட்டை, தொலைபேசி எண், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் எஸ்ஐஆா் படிவங்களுடன் முகாமிற்கு சென்று அலுவலா்கள் உதவியுடன் படிவங்களை நிறைவுசெய்து வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.