மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையில் தேங்கும் கழிவுநீா்

தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காணவேண்டும் என வேண்டுகோள்

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காணவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏவிஎஸ் நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவ்வழியாக கடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், துா்நாற்றத்துடன் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.