பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இடைத்தோ்தலுக்காக விளம்பர நோக்கில் பேசுகிறாா் முதல்வா் விஜய்: டி.ஜெயக்குமாா்

இடைத்தோ்தலை மனதில் வைத்து அரசியல் விளம்பரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

News image

முதல்வர் விஜய்

Updated On :12 ஜூலை 2026, 12:46 am IST

இடைத்தோ்தலை மனதில் வைத்து அரசியல் விளம்பரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆங்கிலேயரை எதிா்த்த வீரன் அழகுமுத்துக்கோனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அதிமுக சாா்பில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.

முதல்வா் விஜய் கரூரில் திரைப்பட படப்பிடிப்பில் பேசுவதுபோல பேசியிருப்பது சரியல்ல. இடைத்தோ்தல்களை மனதில் வைத்து அவா் விளம்பர நோக்கில் பேசியுள்ளாா். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பற்றி அவா் பேசவில்லை என்றாா் டி.ஜெயக்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.