9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

இளம்வயது திருமணம்: தொழிலாளி மீது போக்சோ வழக்கு

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :19 ஜூலை 2026, 2:25 am IST

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை சிகிச்சைக்காக வந்தாா். அவரை மருத்துவா் பரிசோதித்த போது நான்குமாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்துக்கு மருத்துவா் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மகளிா் போலீஸாா், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீகாந்தை (22) இளம்வயதில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தாா். இதன்பேரில், ஸ்ரீகாந்த் மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.