வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சங்கிலிவாடியில் மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பம். குடியிருப்புப் பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள்.

Updated On :14 ஜூன் 2026, 3:18 am IST

அரூரை அடுத்த சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சங்கிலிவாடி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மாரியம்மன் கோயில் தெருவில், குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பத்தின் மேல்பகுதி சேதமடைந்துள்ளது.

கம்பத்தின் சிமென்ட் கட்டுமானம் முழுவதும் உடைந்துள்ளது. கம்பத்தில் கம்பிகள் மட்டுமே உள்ளன. மழைக் காலங்களில் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் உடைந்து குடியிருப்புப் பகுதியில் விழும் நிலையுள்ளது. அதேபோல, குடியிருப்புப் பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான வகையில் உள்ளது.

Story image

மின்கம்பிகளை சீரமைக்கவும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றவும் மின்வாரியத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, சங்கிலிவாடியில் சேதமடைந்துள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.