தருமபுரி ரயில் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உதவி காவல் ஆய்வாளா் சரசு ஆகியோா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பயணிகள் விழிப்போடு பயணிக்க வேண்டும். முன், பின் அறியாதவா்களிடம் தங்களது விவரங்களை கூறக்கூடாது. பயணித்தின்போதோ, ரயில் நிலையங்களிலோ, பணிபுரியும் இடத்திலோ யாரேனும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டால் காவல் துறையினரை அணுகலாம்.
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ஏதும் நிகழும் சூழல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் தகவல்களின் அடிப்படையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உரிய பாதுகாப்பு அளித்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்போம் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், இருப்புப் பாதை போலீஸாா், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










