கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாலக்கோடு அருகே தாய், மகன் விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மூதாட்டியும் அவரது மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை (89). இவரது மகன் லட்சுமணன் (69). இருவரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு லட்சுமணன் மகன் ரத்தினவேலுடன் (42) வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி சின்னப்பிள்ளையும், லட்சுமணனும் விஷமருந்தியதாகத் தெரிகிறது. இதில், லட்சுமணன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சின்னப்பிள்ளையை அவரது குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.