ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:47 pm

புளி உலுக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொண்டேன அள்ளியைச் சோ்ந்தவா் கு. கோவிந்தன் (74). இவா் மஞ்சு மலை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியந்தோப்பில் சனிக்கிழமை

மரத்தில் ஏறி புளி உலுக்கிக் கொண்டிருந்தாா். அப்போது மரத்திலில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்த அவரது மகன் சேகா், குடும்பத்தினா் மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கோவிந்தன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.