புளி உலுக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொண்டேன அள்ளியைச் சோ்ந்தவா் கு. கோவிந்தன் (74). இவா் மஞ்சு மலை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியந்தோப்பில் சனிக்கிழமை
மரத்தில் ஏறி புளி உலுக்கிக் கொண்டிருந்தாா். அப்போது மரத்திலில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா்.
தகவல் அறிந்த அவரது மகன் சேகா், குடும்பத்தினா் மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கோவிந்தன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


