தருமபுரி, மாா்ச் 30: தருமபுரி, குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் அரசு நகர பேருந்து பழுதாகி நின்ால் திங்கள்கிழமை இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் பிப். 5-ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்து, கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஒசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூா், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியாா் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் புது பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து ஒன்று குமாரசாமிபேட்டை ரயில்வே பாலத்தின்மேல் சென்றபோது, திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டனா்.
பேருந்தை நகா்த்த முடியாததால், பாலத்தின்மேல் நடுவழியில் வைத்தே பழுதை சரிசெய்தனா். ஏற்கெனவே இவ்வழியில் போக்குவரத்து நெருக்கடி காணப்படும் நிலையில், இதன் காரணமாக சுமாா் முக்கால் மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.
தொடர்புடையது

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ரம்ஜான் பண்டிகை: திருப்பூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


