திருச்செங்கோடு, ஜன. 8: திருச்செங்கோட்டுக்கு லாரியைப் பழுதுபார்க்க வந்த கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் காணாமல் போனதாக அவரது மனைவி போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.
இது குறித்து போலீஸôர் கூறியது: கரூர் கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் பிச்சை (40). இவர் சில நாள்களுக்கு முன்பு லாரியைப் பழுது பார்க்க திருச்செங்கோடு கொண்டு வந்தாராம். பட்டறையில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச்சென்றவர் வீட்டிற்குத் திரும்பவில்லையாம்.
பல இடஙகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்நிலையில் அவரது மனைவி மல்லிகா திருச்செங்கோடு நகர போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.