இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

"வேலை தேடி வெளியூர்  செல்வதை தடுக்கும் வகையில் அரசு திட்டங்கள் தேவை'

வேலை தேடி தருமபுரி மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை

Updated On :25 டிசம்பர் 2018, 8:38 am IST

வேலை தேடி தருமபுரி மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,  கம்பைநல்லூரில்  ரூ.16 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா,  பேருந்து நிலையத்தில் மேற்கூரை வசதிகள் செய்வதற்கான பூமி பூஜை ஆகியன  திங்கள்கிழமை நடைபெற்றன. விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியது -
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 2 லட்சம் பேர் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் போதிய அளவில் நீர்வளம்,   பருவ மழை இல்லாததால் விவசாயப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  எனவே, விவசாயப் பணிகளை மேம்படுத்தும் வகையில், காவிரி உபரி நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்காக தமிழக அரசு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம்.
கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் பயன் பெறும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து,  செய்தியாளர்களிடம்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியது :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையாகும். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.காளிதாசன், செயல் அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.