பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தருமபுரியில் நாளை கூட்டுறவு வார விழா தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் 65 - ஆவது கூட்டுறவு வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

Updated On :12 நவம்பர் 2018, 10:03 pm


தருமபுரி மாவட்டத்தில் 65 - ஆவது கூட்டுறவு வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் மா.சந்தானம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட 65-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ.14 முதல் நவ.20 -ஆம் தேதி வரை ஒரு வாரம் காலம் நடைபெறவுள்ளது. முதல்நாளில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் கூட்டுறவு கொடியேற்று விழா மற்றும் அதியமான்கோட்டை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மரக்கன்று நடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கூட்டுறவுத் துறைப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நவ.15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாப்பாரப்பட்டி சிவா கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் செலவில்லா வேளாண்மை என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. நவ.16-ஆம் தேதி காலை 8 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் முகாம் நடைபெறுகிறது.
நவ.17 காலை 10.45 மணிக்கு தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, நவ.18 காலை 8 மணிக்கு செம்மாண்டகுப்பம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பி.துரிஞ்சிப்பட்டி, செம்மாண்டகுப்பம், சின்னாங்குப்பம், சின்னம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. நவ.19 காலை 8 மணிக்கு தருமபுரி கூட்டுறவு நகர வங்கித் தலைமையகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
சாமனூர், பேகாரஅள்ளி, இருமத்தூர், சிட்லிங் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல, நிறைவு நாளான நவ.20-ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொம்மிடி, கம்பைநல்லூர், அரூர் மற்றும் பாலக்கோடு கிளைகளில் கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.