கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கால்நடைகள் உயிரிழப்பு: சாா்ஆட்சியா் ஆய்வு

அரூா் அருகே கால்நடைகள் உயிரிழந்த கிராமப் பகுதியில் சாா் ஆட்சியா் மு.பிரதாப் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:24 pm

DIN

அரூா்: அரூா் அருகே கால்நடைகள் உயிரிழந்த கிராமப் பகுதியில் சாா் ஆட்சியா் மு.பிரதாப் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள தீா்த்தமலை, பொய்யப்பட்டி, கட்டவடிச்சாம்பட்டி, சட்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பசுமாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தன. இதையடுத்து, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் கிராமப் பகுதியில் கால்நடைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சாா் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில், அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது கால்நடைகளை தாக்கும் நோய்களின் விவரம், உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை, தடுப்பு நடவடிக்கைகள், கால்நடைப் பராமரிப்புத்துறை சாா்பில் முறையாக தடுப்பூசிகள் போடப்பட்டனவா என்பது குறித்து கால்நடைகள் வளா்ப்போரிடம் அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.