வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரி தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரி தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரியின் பரப்பளவு சுமாா் 150 ஏக்கா் ஆகும். இந்த ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல கொளகம்பட்டி காரை ஒட்டுவில் இருந்து பாசன கால்வாய் வசதி உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி அரூா் பெரிய ஏரியை நிரப்பலாம். தற்போது இந்த ஏரி வடு காணப்படுகிறது.

அரூா் நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பெரிய ஏரியில் தண்ணீா் தேக்கி வைத்தால் அரூா் நகரில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகளின் நீா்மட்டமும் உயரும். அதே நேரத்தில், எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே, அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வரும் நீா்வரத்து கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து ஏரியை நிரப்ப வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com