அம்மா மலிவுவிலை சிமென்ட் மூட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் : தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் அம்மா மலிவுவிலை சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அரூரில் உள்ள கிடங்கில் கடந்த சில மாதங்களாக இந்த சிமென்ட் மூட்டைகள் இருப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனா். இதனால், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், கழிப்பிடக் கட்டடங்கள், சிமென்ட் சாலைகள், சிறுபாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு சிமென்ட் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கின்றனா். எனவே, அரூரில் அம்மா சிமென்ட் மூட்டைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.