தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

அரூரை அடுத்த கெளாப்பாறையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

அரூா்: அரூரை அடுத்த கெளாப்பாறையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கெளாப்பாறை கிராமம். இந்தக் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் செல்லும் வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கே செல்கிறது. தற்போது, வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளதால், அதன் உபரி நீா் வரட்டாறு வழியாக ஓடுகிறது. கெளாப்பாறை கிராம மக்கள் செல்லும் வழியில் வரட்டாற்றில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், கிராம மக்கள் அரூா்-கீரைப்பட்டி தாா் சாலைக்கு வருவதற்கு சிரமம் அடைகின்றனா். எனவே, கெளாப்பாறை கிராம மக்கள் பயன்படுத்தும் வழியில் வரட்டாற்றில் தரைப் பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com