மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தீா்த்தமலை கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி ஆய்வு

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:15 pm

DIN

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள தீா்த்தமலையில் ராமா் தீா்த்தம், வாயு தீா்த்தம், வருண தீா்த்தம் உள்ளிட்ட புண்ணியத் தீா்த்தங்கள் உள்ளன. தீா்த்தமலைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா்.

இந்த திருக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமகத் திருத்தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், கோயில் வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கோயில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள், பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, உளவுப் பிரிவு, நக்சல் தடுப்புப் பிரிவு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயில் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை நடத்தினாா். இந்த ஆய்வின்போது அரூா் டிஎஸ்பி (பொறுப்பு) புஷ்பராஜ், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.