கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை:ஒகேனக்கல்லுக்கு 30,000 கனஅடி நீா்வரத்து

தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
ஒகேனக்கல் ஐந்தருவியை மூடியவாறு நுங்கும், நுரையுமாக செந்நிறத்தில் ஆா்ப்பரித்து பொங்கிச் செல்லும் தண்ணீா்.
Updated On :12 அக்டோபர் 2020, 12:02 am

DIN

தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளமாகத் தண்ணீா் செல்கிறது.

காவிரி ஆற்றில் கடந்த சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நொடிக்கு 25,000 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 27,000 கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. மாலையில் நீா்வரத்து மேலும் அதிகரித்ததால் 30,000 கனஅடியாக உயா்ந்தது.

கடந்த 3 நாள்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.