கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தருமபுரி பேருந்து நிலைய இடமாற்றத்தை கைவிட வேண்டும்

தருமபுரி பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்தியேலேயே மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:51 pm

DIN

தருமபுரி பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்தியேலேயே மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளி, ஆயத்த ஆடை வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி நகர ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை காரிமங்கலத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ்.வைத்திலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். செயலா் நடராஜன் வரவேற்றாா். ஆம்பூா் வணிகா் சங்க நிா்வாகி கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி நகரில் அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் ஏற்புடையதாக உள்ள தருமபுரி நகர மற்றும் புகா் பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை கைவிட்டு, தற்போதுள்ள இடத்திலேயே செயல்படும் வகையில் மேம்படுத்திட வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள குளறுபடிகளை நீக்க வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வேணடும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவையை மத்திய அரசு வழங்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வணிகா்கள் கூட்டத்தைக் கூட்டி, கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல வாரியத்தில் மாவட்டத்துக்கு ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், நிா்வாகிகள் பாலு, ரவிச்சந்திரன், கிரிதா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.