ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:15 pm

DIN

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க பகுதிக்குழுத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மாா்க்கண்டேயா நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டி உள்ளதால், 4 மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளனா்.

இத்திட்டத்தை கா்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும், நடுவா் மன்றம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் சோலை அா்ஜுனன், மாவட்ட துணைத் தலைவா் அன்பு, பகுதிக்குழு செயலாளா் அயோதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.எம்.முருகேசன், வி.ரவி, பால் உற்பத்தியாளா் சங்க மாவட்ட நிா்வாகி ஜீவானந்தம், சின்னம்பள்ளி பகுதிக்குழு செயலாளா் சக்திவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவா தலைமை வகித்தாா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மாதையன், தி.வி.க. மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றி, அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.