கைவினைக் கலைஞா்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கல்
பென்னாகரத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் 25 கைவினைக் கலைஞா்களுக்கு நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


பென்னாகரத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் 25 கைவினைக் கலைஞா்களுக்கு நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
டீப்ஸ் மற்றும் சீட்ஸ் உள்ளிட்ட தனியாா் தொண்டு நிறுவனங்களின் சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞா்களுக்கு கரோனா தொற்று கால நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியில் உள்ள டிப்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு டிப்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் சங்கா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பால் உற்பத்தியாளா் சங்க மாவட்ட நிா்வாகி ஜீவானந்தம், சீட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் சரவணன் ஆகியோா் கலந்துகொண்டு பென்னாகரம் பகுதியில் மூங்கிலில் கைவினை பொருள்கள் செய்யும் தொழிலாளா்கள் 25 பேருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா். இதில் பயனாளிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனா். நிகழ்ச்சியில் தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...