ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:23 pm

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது.

இரு மாநில காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால், அங்குள்ள அணைகளுக்கு நீா்வரத்தைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து வியாழக்கிழமை மாலை நொடிக்கு 9,000 ஆயிரம் கனஅடி நீா், தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. இது வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. மேலும் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, துணை அருவிகளில் நீா்வரத்துக் குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.