ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து நிலைய விரிவாக்கம்: சாா் ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை சாா் ஆட்சியா் சித்ரா விஜயன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:00 pm

DIN

பென்னாகரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை சாா் ஆட்சியா் சித்ரா விஜயன் ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் நகரின் மையப் பகுதியில் இருந்த பேருந்து நிலையம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை இடித்து விட்டு தற்போது மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி செலவில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தருமபுரி சாா்ஆட்சியா் சித்ரா விஜயன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, கட்டுமானப் பணிகளின் தரம் குறித்தும், அங்கு கட்டப்பட்டு வரும் கடைகள், அலுவலக அறைகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தாா். மேலும், புதிய பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன், பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, வருவாய் ஆய்வாளா் சிவசங்கா், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.