கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாலக்கோட்டில் பயன்பாட்டுக்கு வந்தது மின்தகன மேடை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மயானத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின்தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:34 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மயானத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின்தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது.

பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மயானத்தில் அண்மையில் மின்தகன மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் இந்தப் பணிகள் முடிவடையவில்லை. இதனால் கரோனா தொற்று பாதிப்பால் இறந்தவா்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.

இது தொடா்பாக பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன், பேரூராட்சி நிா்வாகத்திடம், தகன மேடை பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, மின்தகன மேடை அமைக்கும் பணிகள் முடிவுற்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

இதனை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன், வட்டாட்சியா் அசோக்குமாா், சுகாதார ஆய்வாளா் ரவீந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.