ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

பென்னாகரம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை தனிப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:54 pm

DIN

பென்னாகரம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை தனிப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூனைக் குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதன் மூலம் வனப்பகுதியில் பறவைகள், விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாகவும் தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் லதா, காவல் உதவி ஆய்வாளா்கள் வேலன், பாபு ஆகியோா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கண்ணன் மகன் முருகன் (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கிக்கான வெடி மருந்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவரைக் கைது செய்து, தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.