கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணங்கள் இல்லாததால் 176 பவுன் நகை பறிமுதல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 176 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ. 35,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:19 pm

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 176 பவுன் நகைகள், ரொக்கப் பணம் ரூ. 35,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி சட்டப் பேரவை தொகுதியின் தோ்தல் பறக்கும் படையினா் நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி சந்திப்புச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது நல்லம்பள்ளியில் இருந்த வந்த காரை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனா்.

இச் சோதனையில் அந்தக் காரில் ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 176 பவுன் தங்க நகைகளையும், ரொக்கப் பணம் ரூ.35 ஆயிரத்து 700ம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த நகைகளையும், ரொக்கப் பணத்தையும் சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.