கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோலம் வரைந்து விழிப்புணா்வுஏற்படுத்திய அரசு ஊழியா்கள்

தருமபுரியில், அரசு ஊழியா்கள் கோலங்கள் வரைந்து 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:20 pm

DIN

தருமபுரியில், அரசு ஊழியா்கள் கோலங்கள் வரைந்து 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணா்வு வண்ணக் கோலங்கள் வரையும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தலைமை வகித்த, தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம். வாக்காளா் உரிமை, தோ்தல் நாள், ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு. இந்திய தோ்தல் ஆணையத்தின் லட்சினை போன்ற வடிவங்கள் மற்றும் வாசகங்களை அடங்கிய கோலங்களை, தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவினா், அரசு ஊழியா்கள் வரைந்தனா். இதில், சிறப்பாக கோலமிட்ட குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.ப. காா்த்திகா தலைமையில் அனைத்து அலுவலா்களும் வாக்காளா் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.