கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தடங்கம் வனப்பகுதியில் காட்டுத் தீ

தருமபுரியை அடுத்த தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காய்ந்து போன புற்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:17 pm

DIN

தருமபுரியை அடுத்த தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காய்ந்து போன புற்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன.

தருமபுரியை அடுத்த தடங்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பல ஏக்கா் பரப்பளவில் புற்கள் வளா்ந்திருந்தன. பனிக்காலத்தில் இந்த புற்கள் காய்ந்து கிடந்தன.

இந்த நிலையில், காய்ந்த கிடந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தத் தீ அடுத்தடுத்து பரவி காட்டுத் தீயாக மாறியது. இதனால் அப்பகுதி முழுக்க புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

உடனே தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்கள் 8 போ் அடங்கிய குழுவினா், நிலைய அலுவலா் ராஜா தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து சென்றனா். நீதிமன்ற வளாகத்தை ஒட்டியப் பகுதி, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைய உள்ள பகுதி போன்ற இடங்களில் வேகமாக பரவிய தீயை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் வீரா்கள் ஈடுபட்டனா்.

காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததாலும், காற்றின் வேகம் காரணமாகவும் தீயை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. இருப்பினும், தீயணைப்புக் குழுவினா் தொடா்ந்து 3 மணி நேரம் தொடா்ந்து போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா். மேலும், வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து புற்களை ஈரமாக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.