கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா்

 தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:52 pm

DIN

 தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன்.குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

பேரறிவாளன் விடுதலை வழக்கு தொடா்பான விசாரணையில், உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடு குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. ஆளுநா்கள் மாநில அரசுகளுக்குக் கட்டுப்பட்டவா்கள். தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநா்கள் செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேபோல ‘நீட்’ தோ்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்தச் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநா் காலம் தாழ்த்தி வருகிறாா்.

இதேபோல, தமிழக அரசிடம் கலந்தாலோசனை செய்யாமல் துணை வேந்தா்கள் மாநாட்டை அவா் கூட்டியது வரம்பு மீறிய செயலாகும். பொதுவாக ஆளுநரின் செயல்பாடு என்பது மாநில அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆளுநா் போட்டியாக அரசு நடத்த முயல்கிறாா்.இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

எனவே, அரசியலமைப்புக்கு முரணாக செயல்படும் தமிழக ஆளுநா் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் செயல்பட்டு கடந்த 10 மாதங்களில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட முயற்சித்து வருகிறாா். முதல்வரின் பல்வேறு செயல்பாடுகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.