எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊத்தங்கரையில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை

ஊத்தங்கரையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவா் சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:19 pm

DIN

ஊத்தங்கரையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவா் சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பரமானந்தல் தொட்டி மடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17) ஊத்தங்கரையில் உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விடுதியில் கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊத்தங்கரை போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து டிஎஸ்பி அமலஅட்வின் விசாரணை நடத்தி வருகிறாா்.

முதல்கட்ட விசாரணையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் தாத்தா உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே தற்கொலை முயன்ற நிலையில், சனிக்கிழமை விடுதியில் உள்ள தனி அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச் சம்பவத்தைத் தொடா்ந்து விடுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.