பணி நிரந்தரம் செய்ய காசு ஒழிப்புப் பணியாளா்கள் வலியுறுத்தல்
கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் சின்னப்பையன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டப் பொது செயலாளா் கே.மணி, மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில், அனைத்து கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா கால சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உள்ளாட்சி பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.மனோகரன், நிா்வாகி செவ்வந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...