கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விதைப் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

 விதைகளின் தரத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்யுமாறு விவசாயிகளுக்கு தருமபுரி விதைப்பரிசோதனை அலுவலா் சு.அருணா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 மே 2022, 8:03 pm

DIN

 விதைகளின் தரத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்யுமாறு விவசாயிகளுக்கு தருமபுரி விதைப்பரிசோதனை அலுவலா் சு.அருணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்களை பராமரிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும். அத்தகைய விதைகளை உபயோகிக்கும் போது விதை செலவு குறைகிறது. புறத்தூய்மை பரிசோதனையில் பிற பயிா் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளனவா என கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.

விதைகளை சேமிக்கும்போது பூச்சி நோய்த் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாள்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத் திறனை காக்க விதைப்பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

எனவே, விதை விற்பனையாளா்கள் மற்றும் விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ள, தங்களிடம் உள்ள விதைகளில் விதை மாதிரிகள் எடுத்து முகப்புக் கடிதத்துடன் பரிசோதனைக் கட்டணமாக ஒரு மாதிரிக்கு ரூ. 80 என்ற விகிதத்தில், விதைப் பரிசோதனை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு விதை மாதிரிகளை அனுப்பலாம். தாங்கள் அனுப்பிய விதைகளின் பரிசோதனை முடிவுகளை 30 நாள்களுக்குள் தங்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.